×

முசிறி ஜிஹெச் வளாகத்தில் கட்டைப்பையில் கிடந்த பெண் சிசு மீட்பு

தா.பேட்டை: திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பின்புறம் பச்சிளம் குழந்தையின் அழுகுறல் இன்று காலை கேட்டது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கட்டைப்பையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. எஸ்ஐகள் பானுமதி மற்றும் மாலிக் ஆகியோர் கட்டைப்பையில் இருந்த குழந்தையை மீட்டு, தலைமை மருத்துவர் காந்திடம் ஒப்படைத்தனர்.

பின்னர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது யாருடைய குழந்தை? இங்கு வந்து குழந்தையை வைத்து சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Sisu ,Musiri GH , Rescue of a baby girl lying in a cot on the Muziri GH campus
× RELATED பெண் சிசு கொலை தடுக்க தனிக்குழு: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி