புதுச்சேரி: இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக வீசுவதால் கடலில் இறங்க சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல போலீசார் ஒலிப்பெருக்கு மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.