×

மத்திய அரசின் தவறான கொள்கையை அம்பலப்படுத்த அமேதி தொகுதியில் 18ம் தேதி ராகுல், பிரியங்கா பாதயாத்திரை

புதுடெல்லி: அமேதி தொகுதியில் வரும் 18ம் தேதி ராகுல்காந்தி பாத யாத்திரை நடத்துகிறார். இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதையும், பணவீக்க விவகாரத்தில் உணர்திறன் இன்றி இருப்பதையும் மக்களிடையே அம்பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் பொது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தின் அமேதி நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 18ம் தேதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துகிறார்.  

தனது முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில், அவர் நடந்து சென்று மக்களிடையே இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில கட்சி பொறுப்பாளருமான பிரியங்காவும் பங்கேற்கிறார். இந்த விவகாரத்தில், டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிரமாண்டமான முறையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்களிடம் ராகுல் காந்தி எடுத்துரைத்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.



Tags : Rahul ,Priyanka ,Amethi , Rahul and Priyanka march on the 18th in Amethi constituency to expose the wrong policy of the central government
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...