சென்னை: சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதி விசாரணை, கணவரின் மரணத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி ராஜ்மோகன் சந்திராவின் மனைவி தொடர்ந்த வழக்கில் திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இயந்திரத்தனமான, வழக்கமான நடைமுறைக்காக வழக்குகளை ஒத்திவைக்க கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளார்.