×

விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

சென்னை: கடந்த 7 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு 7 ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10.7 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் ரூ.2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருந்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள். ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்களே கோரிக்கை வைக்காத நிலையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய கோரி போராட விவசாயிகள் தயாராக வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Tags : Union Government ,K.K. S. Salagiri , k s alagiri
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...