திருத்தணி: திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுவினரின் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,749 கோடி கடனுதவி, நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 7.56 லட்சம் பேருக்கு கடனுதவி அளிக்கப்படுகிறது.