×

காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் 150 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..அக்டோபரில் மட்டும் 19 என்கவுண்டரில் 19 பேர் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் போலீஸ் வாகனத்தில் ஆயுத படை போலீசார் சென்று கொண்டிருந்தனர். பந்தா சதுக்கத்தில் உள்ள சிவாக் பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென பேருந்தின் மீது தீவிரவாதிகள் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தாக்குதலில் போலீசார் நிலைகுலைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

இந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்த நிலையில் 13 போலீசார் காயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினமான நாடாளுமன்ற தாக்குதலில் 20ம் ஆண்டு நினைவு நாளில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் 150 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்களுக்கு உதவியதாக 10க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் பொது மக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து 14 என்கவுண்டரில் 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் .


Tags : Kashmir , தீவிரவாதிகள்
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!