கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஸ்டார் பிரியாணி ஓட்டல். பிரபலமான இந்த ஓட்டலில் தினந்தோறும் 800 முதல் 1000 பேர் வரை சாப்பிட்டு செல்கின்றனர். இந்நிலையில் காவேரிப்பட்டிணம் அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி,அருண்,இராமச்சந்திரன்,அருள் ஆகிய 5 பேரும், ஸ்டார் பிரியாணி ஓட்டலில் 4 சிக்கன் பிரியாணியினை ஆர்டர் செய்துள்ளனர்.
சிக்கன் பிரியாணி வந்ததும் அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அதை நிர்வாகத்திடம் காட்டியுள்ளனர். ஆனால் கத்தரிக்காயில் இருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக பதிலளித்த நிர்வாகத்தினர் பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு போன் செய்து கொடுக்க, அவரோ பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா? என அலட்சியமாக பதில் அளித்ததுடன் பேசாமல் சாப்பிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே அலட்சியம் காட்டும் ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.