சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அழகப்பா செட்டியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக மிகவும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த உமையாள் ராமநாதனின் மறைவு பல்கலைக்கழகத்திற்கு பேரிழப்பாகும். தனது தந்தையான டாக்டர் அழகப்பச் செட்டியாரைப் போல இவரும் கல்விக்காக, மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றத்திற்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், கல்வித்துறைக்கும் பேரிழப்பாகும்.