சென்னை: கோவில் சீரமைப்பு தொடர்பாக ஐகோர்ட் குழுவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என இணையத்தளத்தில் வெளியிட முடியுமா? என இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் சிலைகள், நகைகள் பாதுகாப்பு பற்றிய 32 வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் கோரிக்கை பற்றி தொல்லியல் துறை விளக்கம் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.