×

தஞ்சை அருகே அதிகாலை விபத்து சென்டர் மீடியனில் மது குடித்த 3 வாலிபர்கள் லாரி மோதி பலி

தஞ்சை: தஞ்சை அருகே நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (32). மணல், கல் கான்ட்ராக்டர். மாரியம்மன் கோவில் மருங்கையை சேர்ந்தவர் சந்திரசேகர் (32). அவலிவநல்லூரை சேர்ந்தவர் சுதாகர் (27). 3 பேரும் நண்பர்கள். நேற்று அதிகாலை பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், சந்திரசேகர் டூவீலரிலும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர்.

அங்கு சாலையோரம் கார், டூவீலரை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்போது அந்தவழியாக சென்ற லாரி, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் சென்டர் மீடியனில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Tags : Larry ,Tamjai , Tanjore, accident, center median, 3 teenagers, killed
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...