சென்னை: அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களுடைய சொத்து விவரங்களை ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தலைமைச் செயலாளர் இறையன்பின் உத்தரவை வரவேற்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற செயல் வெளிப்படைத் தன்மையையும் ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.