×

புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் உள்ள பாரகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர், அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அவனது அடையாளம் மற்றும் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Pulwamah ,Action , Terrorist shooting in Pulwama: Security forces raid
× RELATED விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக...