ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிமாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் ராமேஸ்வரம் நகராட்சி எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் பயணிகளிடம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சோதனை நடத்தப்பட்டது.