×

எருமேலியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தமிழக ஓட்டல் ஊழியர் கைது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் எருமேலி பஞ்சாயத்து அலுவலகம் அருகே  உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக கோழிக்கோட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழுவினர் சென்றனர். அப்போது அந்த குழுவை  சேர்ந்த 8 வயது சிறுமியிடம் ஓட்டல் ஊழியர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பக்தர்கள் ஆவேசமடைந்து அவரிடம் தகராறு செய்தனர். இதுதொடர்பாக எருமேலி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து  ஓட்டல் ஊழியர் ஜெயபாலனை (30) கைது செய்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tamil Nadu ,Erumeli , Tamil Nadu hotel employee arrested for molesting a girl in Erumeli
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...