சென்னை: ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸை கைது செய்தது வரவேற்கத்தக்கது என பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களின் குடும்பத்தினரை பழித்து பேசுவதும் ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறுகின்றனர். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல்கட்சியினர் என அனைவரின் செயல்பாடும் அவசியம் இருக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.