×

பள்ளி மாணவர்களிடம் ஆபாச பேச்சு:2 ஆசிரியைகள் அதிரடி சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆபாசமாக பேசிய புகாரில், அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரை சஸ்பெண்ட் செய்து சிஇஓ முருகன் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உமையாள்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக அங்குலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பள்ளியின் தலைமை ஆசிரியரை, அவதூறாக பேசி வந்துள்ளார். இதேபோல், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர் குறித்து அவதூறான வார்த்தைகளை பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பலமுறை எச்சரித்தும், இவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதனிடையே, கடந்த இருதினங்களுக்கு முன்பு பள்ளியில் திரண்ட மாணவர்களின் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் புகாராக பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல், வாழப்பாடி அடுத்த திருமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் இயற்பியல் முதுகலை ஆசிரியராக உள்ளவர் மகேஸ்வரி. இவர் பள்ளி மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்தாமல் இருந்ததுடன், மாணவர்களை தகாத வார்த்தையால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். .

இதனை தொடர்ந்து ஆசிரியையிடம் ேபானில் பெற்றோர்கள் பேசும்போது, அவர்களிடமும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன், எங்கு சென்று புகார் அளித்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இதுதொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். அவர் அந்த புகாரை, சிஇஓவுக்கு அனுப்பி வைத்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்திய சிஇஓ முருகன், புகாருக்குள்ளான இரு ஆசிரியைகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : To school students, porn talk, teachers, suspend
× RELATED யானை தாக்கி விவசாயி பலி