ஆந்திரா: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்துக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.