×

இந்தியாவில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 393 பேர் உயிரிழப்பு, 9,265 பேர் குணம்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.75 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.46 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 7,992 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,82,736 ஆக உயர்ந்தது.

* புதிதாக 393 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,75,128 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 9,265பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,14,331 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 93,277 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,31,99,92,482  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,36,569 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , India, corona, mortality, character
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...