×

ஏழுமலையானுக்கு உற்சவ நாட்களில் அணிவிக்க வைரம், மாணிக்கம் பதித்த 5.3 கிலோ தங்க கை கவசம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு மிக முக்கிய உற்சவ நாட்களில் அணிவிக்க வைரம், மாணிக்கம் ஆகியன பதித்த 5.3 கிலோ கை கவசத்தை பக்தர் வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதோடு ஏழுமலையானுக்கு தங்கத்தில், வைரங்கள் பதித்த நகைகள், கிரீடம், வாள் உள்ளிட்டவற்றை வேண்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

அதேபோல் திருப்பதி ஏழுமலையானுக்கு வைரம், மாணிக்கம் பதித்த 5.3 கிலோ தங்கத்திலான கை கவசங்களை, பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் நன்கொடையாக கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் நேற்று வழங்கினார். முன்னதாக அவர் சுவாமி தரிசனம் செய்தார். இந்த தங்க கை கவசங்கள் மிக முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Ezhumalayan , Tirupati, gold glove
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க...