புதுச்சேரி: புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஆரோவில் வனப்பகுதியில் அதிகளவில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படத்தும் எனவும் கூறியுள்ளது. கிரவுன் ரோடு என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்த ஆரோவில் நிறுவனம் ஏராளமான மரங்களை வெட்ட திட்டமிட்டிருந்தது.