டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என பொதுமக்கள் முழக்கமிட்டனர். இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் இராணுவத் தளபதிகள் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றுள்ளனர்.