சென்னை: கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் நிகழ்ந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சமூக பொறுப்பு குறித்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.