×

நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நரிக்குறவர்களை நடுவழியில் இறக்கி விட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!!!

நாகர்கோவில்: குளச்சலில் மீன் விற்பனை செய்யும் பெண் செல்வமேரி அம்மாள் என்பவரை அரசு பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவமும், இது தொடர்பாக அவர் ஆதங்கப்படும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த அரசு பஸ் கண்டக்டர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ்சில் குறவர் குடும்பம் ஒன்று நேற்று பயணம் செய்தது. கண்டக்டர் திடீரென விசில் அடித்து நிறுத்தி, பார்வை குறைபாடுடைய கணவர், மனைவி, குழந்தை ஆகிய குறவர் குடும்பத்தினரை கீழே இறக்கி விட்டதுடன், அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். உடனே ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி இருக்கிறார்.  

இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளும், போலீசாரும் இதுபற்றி விசாரணை நடத்தியதோடு, சம்பந்தப்பட்ட குறவர் குடும்பத்தினரை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி,சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும், என்றார்.

இந்நிலையில் நாகர்கோவிலில் நரிக்குறவர்களை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் நெல்சன்  மற்றும் நடத்துநர் ஜெயபாலன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Nagargov , : ஓட்டுநர், நடத்துநர், சஸ்பெண்ட்,குளச்சல்
× RELATED நாகர்கோவிலில் திறன் மேம்பாட்டு கழக...