மும்பை: ராஜஸ்தான் மாநிலம் மாதோபூர் மாவட்டம் பர்வாராவில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ்சஸ் கோட்டையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் - விக்கி கவுசல் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்தது. இதில் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் கலந்துகொண்டனர். நேற்று பிற்பகலில் பஞ்சாபி முறைப்படி கேத்ரினா, விக்கி கவுசலின் திருமணம் நடந்தது. திருமண விழாவில் பங்கேற்றவர்கள் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கிக் கொண்ட
னர். பாலிவுட்டிலிருந்து தயாரிப்பாளர் கரண் ஜோஹர், இயக்குனர் பர்ஹா கான், நடிகர் அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் திருமணத்துக்கு வந்திருந்தனர்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த திருமண விழா நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்ற சிக்ஸ் சென்ஸ்சஸ் கோட்டைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த திருமண விழாவை ஒளிபரப்புவதற்கான உரிமம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்கு ₹80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த மாதம் துவக்கத்தில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.இதற்கு முன் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமண விழாவும் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.