×

அருப்புக்கோட்டை அருகே புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப சாவு : வயிற்றில் இருந்த சிசுக்களும் உயிரிழந்த சோகம்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியை சேர்ந்தவர் அனந்தாயி (25). 5 மாத கர்ப்பிணி. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இரட்டை குழந்தை இருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு அனந்தாயி இப்பகுதியிலுள்ள ஓட்டலில் புரோட்டா வாங்கி சாப்பிட்டார். இதன்பிறகு அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனந்தாயி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை ஆண் சிசுக்கள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




Tags : Aruppukkottai , Near Aruppukkottai Prota ate The tragic death of a pregnant woman : The tragedy of the death of the babies in the womb
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;...