கன்னியாகுமரி: குளச்சலில் மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நடத்துனர், ஓட்டுனரால் மூதாட்டி இறக்கி விடப்பட்ட செய்தி அறிந்து போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியத்தின் பேரில் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து துறை குமாரி மாவட்ட துணை இயக்குனர் ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.