சேலம்: ஆத்தூர் தலைவாசல் அருகே நின்றிருந்த லாரியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் சாமிநாதன் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்குவாரி சாமிநாதன் சடலத்தை கைப்பற்றி தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.