மதுரை: ராமநாதபுரம் கீழத்தூவலில் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மறு உடற்கூராய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். காவலர்கள் தாக்கியதில் ரத்தவாந்தி எடுத்து மணிகண்டன் உயிரிழந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.