சென்னை: மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீரை வெளியேற்ற திறக்கப்பட்ட அவசரகால ஷட்டர் மூடப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியை நெருங்கிய போது அவசரகால ஷட்டர் மூலம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக குறைந்ததால் தானியங்கி ஷட்டர் வழியாக மட்டும் கிளியாற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.