சென்னை: வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை சார்பில், ரூ.14.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 11 சார்பதிவாளர் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விருத்தாசலம் ஒருங்கிணைத்த மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.