தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் சிறையில் உள்ள காவலர் முருகனின் இடைக்கால மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனது சகோதரி மகன் திருமணத்தில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிட காவலர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு நடக்கும் நீதிமன்றத்தை அணுகி மனுதாரர் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.