×

மணமேல்குடியில் மர்மமாக இறந்துகிடந்த 10 ஆடுகள்-போலீசார் விசாரணை

அறந்தாங்கி : மணமேல்குடியில் மர்மமான முறையில் 10 ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வெள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான 8 ஆடுகள், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் என மொத்தம் 10 ஆடுகள் வயல் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுபோது, வயல் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது சம்மந்தமாக மணமேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Manamelkudi , Aranthangi: The mysterious death of 10 goats in Manamelkudi has caused a stir in the area.
× RELATED புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி