×

இந்தியாவில் ஒரே நாளில் 8,306 பேருக்கு கொரோனா, 211 பேர் பலி.. 8834 பேர் குணமடைந்தனர் : மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.73 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.46 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 8,306 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,41,561 ஆக உயர்ந்தது.

* புதிதாக 211 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,73,537ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,834 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,69,608 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 98,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 98.35% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.28% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,27,93,09,669 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 24,55,911 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India ,Federal Health Department , கொரோனா
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...