தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த பிரியதர்சினி தனது குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.