×

அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங் எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை முயற்சி

தர்மபுரி: நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் சரவணன்(20). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு, விடுதியில் வைத்து 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், சரவணனை ராகிங் செய்துள்ளனர். அப்போது, உள்ளாடையுடன் நிற்க வைத்து, கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். இதில், சரவணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சீனியர் மாணவர்கள், மிரட்டியதால், புகாரை சரவணன் வாபஸ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விடுதி வார்டன் பொறுப்பில் உள்ள இளவரசன் சரவணனை பேத்தாலஜி பாடத்தில் பெயிலாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவர், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர்ச்சியாக தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். சுய நினைவின்றி கிடந்த அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தற்போது தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டீன் அமுதவள்ளி கூறுகையில், ‘‘விடுதியில் ராகிங் நடைபெற்றதை அறிந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் 4 பேரையும், விடுதியில் இருந்து வெளியேற்றி விட்டோம். ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளோம்.  3 பேர் கொண்ட குழு விசாரிக்கிறது,’’ என்றார்.

Tags : MPPS ,Government Medical Hospital Inn , Government Medical College, hostel, rocking MPBS student, suicide
× RELATED கார் டயர் வெடித்து ஸ்கூட்டர் மீது...