×

சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு

சென்னை: மழை நின்றதால் நீர்வரத்து குறைந்ததையடுத்து, சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகள் நிரம்பின. இதனால், 5 ஏரிகளில் இருந்து கடந்த 7ம் தேதி முதல் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Reduction of overflow opening in Chennai drinking water lakes
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...