நாகாலாந்து: பாதுகாப்பு படையினர் சுட்டு 13 அப்பாவிகள் கொல்லப்பட்டதை கண்டித்து நாகாலாந்தில் பல இடங்களில் தீவைப்பு மற்றும் கலவரம் ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தின் டியூன்சாங் நகரில் பல அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மான் நகரில் உள்ள அசாம் துப்பாக்கி படை பிரிவினர் பாசறையையும் கல்வீசி தாக்கி போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.