×

பொன்பரப்பியில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செந்துறை: அரியலூர் மாவட்டம் செந்துறை காவல்நிலையம் சார்பாக கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, தலைமை காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மஞ்சுளா ஆகியோர் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களை பகிர்ததோடு, அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு தொடர்பு எண்களையும் தெரிவித்து, பாலியல் குற்றங்களை தடுக்க உறுதிமொழியும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னபொண்ணு, கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, தொழிற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் பஞ்சாபிகேசன் ஒருங்கிணைத்திருந்தார்.

Tags : Bonaprabi , Safety Awareness Program for School Students in Ponparappi
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...