×

டெல்டா உள்ளிட்ட மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: சிங்கப்பூர் அரசு

கோலாலம்பூர்: டெல்டா உள்ளிட்ட மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தியாவிலும் 3 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்திருக்கிறது.

கொரோனாவுக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகள் தான் ஒமிக்ரான் வைரசுக்கும் தென்படுவதாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துவதில்லை என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதுமில்லை என கூறியுள்ளது. மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும் சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 30க்கும் அதிகமான நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒமிக்ரான் வைரசுக்கு என தனியாக எதையும் செய்யவேண்டாம். கொரோனா வைரஸுக்கான தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், இரு டோஸ் தடுப்பூசி, சமூக இடைவெளி, கும்பல் கூடாதிருத்தல் போன்றவை நம்மை காக்கும் என தொற்றுநோய் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Delta ,Government of Singapore , Delta, Corona, Omigron, Government of Singapore
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!