ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழையால் வைத்தியநாத சுவாமி கோயிலில் இரண்டாவது நாளாக வெள்ள நீர் புகுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான செண்பகத்தோப்பு, மல்லி, வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 1ம் தேதியும் கோயில் பிரகாரத்தில் வெல்ல நீர் புகுந்தது. தற்போது தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.