சென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் விசாரணைக்கு அஞ்சி தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது. உரிய ஆவணங்களுடன் ஆஜராக வெங்கடாசலத்துக்கு நேற்று சம்மன் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆஜராக உத்தரவு பிறப்பித்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாாிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துக் கொண்டார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.