சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் மண்டல வாரியாக பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பார்த்தீபன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் அறிவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் கூறியுள்ளனர். மண்டல வாரியாக பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதால் ஆண்கள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.