×

89-வது பிறந்த நாள் விழா கி.வீரமணிக்கு வைகோ வாழ்த்து

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: திராவிடர் கழகம் எனும் தமிழர் உரிமை காக்கும் பாசறையை உயிர்த்துடிப்போடு இயக்கிவரக் கூடிய கி.வீரமணி 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு உரியவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார். உலகத்தில் தமிழ் இனம், திராவிடப் பாரம்பரியம் எங்கிருந்தாலும் மகிழ்வோடும், இன்ப முகிழ்வோடும் வாழ வேண்டும் என்பதனை உயிர் மூச்சாய் கொண்டு வாழும் ஒப்பற்ற தலைவர் கி.வீரமணி தமிழ்ச் சமுதாயம் எழுச்சியுடன் வாழ வேண்டும் என சிந்தித்த தந்தை பெரியாரின் விரிவாக்க சிந்தனையாளர் அவர். திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி ஆயிரம் பிறை கண்டு நூறாண்டுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழினம் காக்கும் தூய பணியை தொய்வின்றி தொடர இதயம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tags : Vaiko ,K. Veeramani , Vaiko congratulates K. Veeramani on his 89th birthday
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...