×

ரிஸ்க் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: ரிஸ்க் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 3,476 பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது. பயணிகளிடம் நடத்திய RT-PCR பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாக என கண்டறிய 6 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Corona infection was confirmed in 6 people from 12 countries classified as risk countries
× RELATED டெல்லி முதல்வரை பதவியில் இருந்து...