×

கெடிலம் ஆற்றில் காருடன் மூழ்கிய முருகன் என்பவரின் உடல் மீட்பு

கள்ளக்குறிச்சி: கடந்த 2 நாட்களுக்கு முன் கெடிலம் ஆற்றில் காருடன் மூழ்கிய முருகன் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த பழங்கூர் கிராமத்தையும், உளுந்தூர்பேட்டை கிளினூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆலூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தொடர் மழையின் காரணமாக மூழ்கி வெள்ளநீர் செல்கிறது. கிளியூர் கிராமத்தை சேர்ந்த கிளியன்(50), முருகன்(42), சங்கர்(47) ஆகிய மூன்று நபர்கள் காரில் தரைப் பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வெள்ளநீரின் வேகத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கிளியன் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இந்நிலையில், காரை ஓட்டிச்சென்றவரும் அதன் உரிமையாளருமான முருகன் என்பவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் காருடன் மூழ்கிய முருகன் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Tags : Murugan ,Kedilam , Flood, car, rescue mission, Kedilam River
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...