சென்னை: காணாமல்போன சி.ஆர்.பி.எஃப். வீரரை கண்டுபிடித்துத் தர கோரி முதுகுளத்தூரை சேர்ந்த வனிதா தொடந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எஃப். பட்டாலியனில் பணியாற்றிய கணவர் பாலமுருகன் கடந்த அக்.17ம் தேதி முதல் காணவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. கணவர் பாலமுருகன் காணமால்போனது குறித்து அதிகாரிகளிடம் முறையீட்டும் எந்த பலனும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.