×

கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் காரின் 4 ‘வீல்’ மிஸ்சிங்

பதான்கோட்: பதான்கோட்டில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவரின் காரில் இருந்த 4 சக்கரங்களையும் மர்ம கும்பல் திருடிச் சென்றது. ஜம்மு காஷ்மீரின் பதான்கோட் சிவில் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் டாக்டர் ஆகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள வழக்கமான இடத்தில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில், அவரது காரின் நான்கு சக்கரங்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஆனால், சக்கரங்களை கழற்றிவிட்டு அதற்கு செங்கற்களை அடுக்கி முட்டுக் கொடுத்துவிட்டு தப்பினர். டாக்டர் ஆகாஷ் வழக்கம் போல் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்ப புறப்பட்டார். காரை எடுப்பதற்காக வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்தபோது, தனது காரில் இருந்த 4 சக்கரங்களும் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டாக்டர் ஆகாஷ் கூறுகையில், ‘சிவில் மருத்துவமனையின் கொரோனா தனிமை வார்டில் பணியாற்றி வந்தேன். ஒவ்வொரு நாளும் இரவுப் பணி  என்பதால், காரை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வேன். நள்ளிரவு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு காரின் 4 சக்கரங்களையும் திருடர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரி டாக்டர் ராகேஷ் சர்பால் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றார்….

The post கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் காரின் 4 ‘வீல்’ மிஸ்சிங் appeared first on Dinakaran.

Tags : Doctor ,Kar ,Corona Ward ,Pathankot ,Jammu ,Dr. ,Corona ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்