×

5 எஸ்பிக்கள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 5 எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரை நகர போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த ஈஸ்வரன் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராகவும், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி எஸ்பியாக இருந்த ஆறுமுகசாமி மதுரை நகர போக்குவரத்து துணை கமிஷனராகவும், திருநெல்வேலி எஸ்பியாக இருந்த மணிவண்ணன் கடந்த வாரம் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர், புளியந்தோப்பு துணை கமிஷனர் பணிக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார். அதைதொடர்ந்து தற்போது சென்னை காவலர் பயிற்சி கல்லூரி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த விஜயகுமார் சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக இருந்த அரவிந்தன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Prabhakar , Transfer of 5 SPs: Order of Home Secretary Prabhakar
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி...