×

ஆர்.எஸ். மங்கலம் அருகே வீட்டு சுவர் இடிந்து முதியவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செம்பிலான்குடி கிராமத்தில் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை மீண்டும் மழை பெய்தது. மழை காரணமாக இன்று காலை ஆர்.எஸ்.மங்கலம் செம்பிலான்குடி கிராமத்தில் மரியராஜ் (82) என்பவரது வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி மரியராஜ் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஆர்.எஸ். மங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய முதியவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




Tags : R.S. ,Mangalam , R.S. An old man dies when the wall of his house collapses near Mangalam
× RELATED மணப்பாறை அருகே குடும்ப தகராறில்...